Pages

Thursday 13 May 2010

மனைவிக்கு சில உபதேசங்கள்....

NB:


01. நீங்கள்தான் உங்கள் வீட்டின் வாசனை. உங்கள் கணவன் வீட்டினுள் நுழைந்தது முதல் அந்த வாச னையை உணரச் செய்யுங்கள்.

02. கணவன் ஓய்வெடுக்கக் கூடிய இடங்களை தயார் செய்து வையுங்கள். எப்போதும் அழகிய தோற் றத்தில் சுறுசுறுப்பானவராக செயற்படுங்கள்.

03. கணவனுடனான தொடர்ச்சியான உரையாடலை, கலந்துரையாடலை பேணிக் கொள்ளுங்கள். வாதாட்டம், தனது கருத்தில் பிடிவாதம் என்பவற் றிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள்.

04. உங்களுக்கு ஷரீஆ விதித்துள்ள பொறுப்புக்களை விளங்கிக் கொள்ளுங்கள். பெண்களுக்கு இயல்பாக இருக்க வேண்டிய விடயங்களை ஷரீஆ உங்களுக்கு வழங்கியுள்ளது.

05. உங்கள் சத்தத்தை உயர்த்தாதீர்கள். குறிப்பாக கண வன் இருக்கும்போது.

06. நீங்கள் இருவரும் கியாமுல் லைல் போன்ற தொழு கைகளை ஒன்றாக நிறைவேற்றுவதில் கவனமாக இருங்கள். ஏனெனில் அது உங்கள் இருவருக்கும் சந்தோஷத்தையும் அன்பையும் ஒளியையும் ஏற்படுத்துகின்றது.

07. கணவன் கோபத்திலிருக்கும்போது நீங்கள் அமை தியாக இருங்கள். கணவனின் திருப்தியின்றி இர வில் உறங்கச் செல்ல வேண்டாம். ஏனெனில் உங் கள் கணவன்தான் உங்களுக்கு சொர்க்கமும் நரக மும்.

08. கணவன் ஆடைகளை தெரிவு செய்வதில் உதவி செய்யுங்கள். அவருக்கு பொருத்தமான ஆடை களை தெரிவு செய்து வழங்குங்கள்.

09. கணவனின் தேவைகளை விளங்கிக் கொள்வதற் கும் அவருடன் அழகிய முறையில் பழகுவதற் கும் நேரத்தை ஒதுக்குங்கள்.

10. உங்களுடைய தோற்றத்திலும் உடையிலும் கவ னம் செலுத்துங்கள்.

11. உங்களுடைய கணவன் தனது அன்பை, விருப் பத்தை வெளிப்படுத்தும் வரை காத்துக் கொண்டி ருக்காதீர்கள்.

12. ஒவ்வொரு இரவிலும் கணவனுக்கு புதுமணப் பெண்ணைப் போல தயா ராகி தோற்றமளியுங் கள். கணவனை முந்தி நீங்கள் உறங்கச் செல்ல வேண்டாம்.

13. கணவன் அழகிய முறையில் உங்களை எதிர் கொள்வார் என எதிர்பார்க்க வேண்டாம். ஏனெ னில் அவர் பல வேலைப்பளுக்களில் ஈடுபட்டவ ராக இருப்பார்.

14. எப்போதும் புன்னகையுடனும் அன்பை வெளிப் படுத்தும் உணர்வுகளுடனும் கணவன் பயணத்தி லிருந்து திரும்பும்போது வரவேற்பளியுங்கள்.

15. கணவனின் திருப்தி அல்லாஹ்வின் நெருக்கத் தைப் பெறுவதற்கு முக்கிய மானது என்பதை எப் போதும் ஞாபகத்தில் கொள்ளுங்கள். எப்போதும் தோற் றத்திலும் வார்த்தையிலும் அவரை வரவேற் கும்போது புதிய விடயங்களை செய்யுங்கள்.

16. ஏதாவதொரு விடயத்தை கணவன் கேட்கும் போது மறுக்கவோ அல்லது தாமதிக்கவோ வேண்டாம். மாற்றமாக உற்சாகத்துடன் விரை வாக அதனை நிறைவேற்றுங்கள்.

17. வீட்டுத் தளபாடங்களை கணவன் பயணத்திலி ருந்து திரும்பும்போது புதிய முறையில் ஒழுங்கு படுத்துங்கள். அதனை கணவனின் மகிழ்ச்சிக்கா கவே செய்கின்றீர்கள் என்பதை உணர்த்துங்கள்.

18. வீட்டை அழகிய முறையில் நிருவகிப்பதற்கும் நேரத்தை ஒழுங்குபடுத்து வதற்கும் முதன்மைப் படுத்த வேண்டிய விடயங்களை ஒழுங்குபடுத்து வதற்கும் உங்களை தயார்படுத்திக் கொள்ளுங் கள்.

19. பெண்களுக்கு இயல்பாக இருக்க வேண்டிய திற மைகளை திறன்பட கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் அவை உங்களுடைய வீட்டிற்கும் உங்களது தஃவாவிற்கும் அவசியமானவையாகும்.

20. கணவன் வீட்டுக்கு கொண்டுவரும் எந்தவொரு பொருளாக இருந்தாலும் அவற்றை இன்முகத் தோடு பெற்றுக் கொள்ளுங்கள். அதற்காக நன்றி செலுத் துங்கள்.

21. வீட்டை சுத்தமாக வைப்பதிலும் ஒழுங்காக வைப் பதிலும் பேணுதலாக இருங்கள். சிலவேளை கணவன் அதனை உங்களிடம் எதிர்பார்க்காத போதும் கூட.

22. எப்போதும் திருப்திப் படுபவளாக இருங்கள். வீண் விரயங்களை விட்டும் தவிர்ந்திடுங்கள். மேலதிக செலவுகளை ஏற்படுத்தாதீர்கள்.

23. குடும்ப ஒன்றுகூடல்களை பொருத்தமான நேரத் தில் ஏற்பாடு செய்யுங்கள்.

24. கணவன் நீண்டதொரு இடைவெளியின் பின்னர் வீட்டுக்கு வரும்போது அவரிடம் முறைப்பாடு களை வேதனைகளை முன்வைக்காதீர்கள்.

25. குழந்தைகள் கணவனை வரவேற்கும் வகையில் தயார்படுத்தி வையுங்கள்.

26. குழந்தைகளைப் பற்றி கணவன் வீடு திரும்பிய வுடன் அல்லது தூங்கியெழுந்தவுடன் அல்லது உணவு சாப்பிடும்போது முறையிடாதீர்கள்.

27. கணவன் குழந்தைகளுடன் உரையாடும்போது அல்லது ஏதாவதொரு விடயத்திற்காக அவர் களை தண்டிக்கும்போது நீங்கள் தலையிட வேண்டாம்.

28. குழந்தைகளுக்கும் தந்தைக்குமிடையில் சிறந்த தொடர்பை பேணிக் கொள்வதில் கவனம் செலுத் துங்கள்.

29. நீங்கள் எவ்வளவுதான் வேலைப்பளுவுடன் இருந் தாலும் குழந்தைகளை பராமரிப்பதில் பொடுபோக்காக இருப்பதில்லை என்பதை உணரச் செய்யுங்கள்.

30. குழந்தைகளுக்கு ஓய்வு கிடைக்கும்போது அவர் களது திறமைகளை வளர்ப்பதிலும் அவர்களுக்கு பிரயோசனமான விடயங்களை கற்றுக் கொடுப் பதிலும் கவனம் செலுத்துங்கள்.

31. உங்களுடைய பெண் குழந்தைகளுக்கு சிறந்த தோழிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அவர்களது ஒவ்வொரு பருவத்திலும் ஏற்பட்டு வரும் மாற்றங் களை அவதானியுங்கள்.

32. சிறு குழந்தைகளின் ஆளுமை விருத்திக்கு தேவை யான விடயங்களை செய்யுங்கள்.

33. குழந்தைகள் மீதும் கணவன் மீதும் உள்ள உங்கள் கடமைகளுக்கிடையில் நடுநிலைமையைப் பேணுங்கள்.

34. கணவனின் பெற்றோருக்கு கண்ணியம் செலுத் துங்கள். அவரையும் அவரது பெற்றோரையும் பிரிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடாதீர்கள். அவ ரது பெற்றோர்களுக்கு பெறுமதியான பரிசில் களை வழங்குங்கள்.

35. கணவனின் குடும்பத்தினரை அன்புடனும் கண் ணியத்துடனும் நடாத்துங் கள். அவர்களுக்கு பொருத்தமான சந்தர்ப்பங்களில் பரிசுப் பொருட் களை வழங்குங்கள்.

36. கணவனின் விருந்தினர்களை கவனிப்பதில் அக்கறை செலுத்துங்கள். திடீரென்று அவர்கள் வந்தாலும் அவர்களுக்குத் தேவையான உதவி களை செய்யுங்கள்.

37. கணவனின் காகிதாதிகள், உபகரணங்களை பாது காத்துக் கொள்ளுங்கள்.

38. எப்போதும் எந்தவொரு விருந்தாளியையும் அழைத்து வரும்நிலையில் வீட்டை வைத்துக் கொள்ளுங்கள்.

39. கணவன் தாமதமாக வரும்போது அவரை கண்டித் துக் கொள்ளாதீர்கள். மாற்றமாக அவரை எதிர் பார்த்திருந்ததை உணரச் செய்யுங்கள்.

40. வீட்டு ரகசியங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.இவை ஒரு மனைவி கவனத்தில் கொள்ள வேண் டிய சில விடயங்கள் மட்டுமே. ஆனால் மிக முக்கிய மாக கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விடயம் இருக்கின்றது. எப்போதும் நாம் அல்லாஹ்வின் திருப்தியின் பால் தேவையுடையவர்களாக இருக் கின்றோம். அதனை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. (Thanks; MEELPARVAI)

No comments:

Post a Comment