Pages

Thursday 24 June 2010

கணவனின் திருப்தியைப் பெறுதல்

*கணவனின் உள்ளத்தில் இடம் பிடிப்பதற்கான பல வழிமுறைகள் காணப்படுகின்றன. அவற்றில் மென்மையான பேச்சு, குடும்ப வாழ்வின் இரகசியங்களைப் பாது காத்தல், வணக்க வழிபாடுகள், அழகிய உடை மற்றும் நறுமணம், சிறந்த உணவுகளை வழங்குதல் என்பன முக்கியமானவையாகும்.


01. மென்மையான பேச்சு: கணவனை புன்னகையோடு அழையுங்கள். புன்னகையோடு விடைகொடுங்கள். அவனுடைய நிலைமைகள்பற்றி கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அவனுடைய வேலை களில் தலையிட வேண்டாம். அவனிட மிருந்து நல்ல வார்த்தைகளைக் கேளுங்கள். மென்மையான வார்த்தைகளை வெளிப்படுத்துங்கள். அவன் ஏதும் தவறுகள் செய்தால் நிந்திக்காதீர்கள். அவன் ஏற்றுக் கொள்கின்ற வகையில் அதனைத் தெளிவுபடுத்துங்கள். அவன் ஏதேனும் கேட்டால் மறுக்காதீர்கள். மோசமான வார்த்தைகளைக் கொண்டு முரண்படாதீர்கள். அது உங்களுடைய குடும்ப வாழ்வில் பிளவை ஏற்படுத்துவிடும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; ஒரு பெண் ஐவேளைத் தொழுகைக ளையும் நிறைவேற்றி, ரமழான் நோன்பை நோற்று, தனது கற்பைப் பாதுகாத்து, தனது கணவனுக்கு கட்டுப்பட்டு நடந்தால் அவளுக்கு பின்வருமாறு கூறப்படும். நீங்கள் விரும்பிய வாயிலினூடாக சுவனத்தில் நுழைந்து கொள்ளுங்கள்.

02. குடும்ப வாழ்வின் ரகசியங்களைப் பாதுகாத்தல்: குடும்ப வாழ்வின் ரகசியங்களை மனைவி பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அவற்றை வீட்டுக்கு வெளியில் வெளிப்படுத்தக் கூடாது. வீட்டையும் பொருட்களையும் பாதுகாத்துக் கொள்ளுங் கள். கணவன் இல்லாதபோது எந்தவொரு அந்நியனையும் உள்ளே நுழைய அனும திக்க வேண்டாம். வீட்டை விட்டு வெளியே செல்ல விரும்பினால் கணவனின் அனுமதியைப் பெற்றுக் கொள்ளுங்கள். அது உங்களது வாழ்க்கைக்குப் பாதுகாப் பாக அமையும். அவனுடைய செல்வங்களையும் குடும்பத்தையும் நல்ல முறை யில் கவனித்துக் கொள்ளுங்கள்.

03. வணக்க வழிபாடுகள்: அல்லாஹ்வை ஞாபகப்படுத்த மறக்க வேண்டாம். தொலைக்காட்சியையோ அல்லது வேறேதேனு மொன்றையோ அல்லாஹ்வை ஞாபகப்படுத்துவதை விட்டும் தடுக்கும் பொருளாக மாற்றிக் கொள்ளாதீர்கள். உங்களுடைய உள்ளம் இறந்துப் போய்விடும். கணவன் தொழுகையை மறந்தால் அவனுக்கு ஞாபகமூட்டுங்கள். அவனுக்கு முன்னால் நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள். ஐந்நேரத் தொழுகைகளையும் பேணித் தொழுது கொள்ளுங்கள்.

04. அழகிய உடை மற்றும் நறுமணம்: உங்கள் கணவனுக்கு மிக அழகான ஆடை களை அணிந்து வெளிப்படுங்கள். அவனுக்காக நறுமணம் பூசிக் கொள்ளுங்கள். எந்தவொரு கணவனும் தனது மனைவியின் அழகிய தோற்றத்தை விரும்புவான். அவனுக்கு விருப்பமான நிறங்களில் ஆடை அணியுங்கள். வீட்டினுள் இருக்கும் போது அவனுக்காக உங்கள் அலங்காரங்களை வெளிப்படுத்துங்கள். அவனோடு மெல்லிய குரலில் பேசுங்கள். இதனால் அவனது அன்பு அதிகரிக்கும்.

05. சிறந்த உணவுகளை வழங்குதல்: உங்கள் கணவனுக்கு மிகச் சிறந்த உணவு களை தயாரித்து வழங்குங்கள். அவனுக்காக உறங்குவதற்கு படுக்கையைத் தயார் படுத்தி வையுங்கள். அவனுக்கு பணியாற்றுவதற்காக எந்தவொரு பணிப்பெண் ணையும் நியமிக்காதீர்கள். கணவனுக்கு விருப்பமான உணவுகளைக் கேட்டு தயா ரித்துக் கொடுங்கள்.

இந்த வழிமுறைகள் சில ஆலோசனைகள் மட்டுமே. இவை தவிர்ந்த இன்னும் பல வழிமுறைகளும் காணப்படுகின்றன. (Meelparvai & Women in Islam in FB) (Ends)

Home                 Sri Lanka Think Tank-UK (Main Link)

No comments:

Post a Comment